உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு கடந்த மே மாதம் 20,21,22, ஆம் திகதிகளில் மலேசியாவில் நடைபெற்றது. அதில் விஷேட பேச்சாளராகக் கலந்து கொண்ட இஸ்லாமிய அறிஞர் அஷ்ஷெய்க் ஏ.ஸி. அகார் முஹம்மத் (நளீமி) அவர்கள் 'இலட்சிய வாழ்வுக்கு இஸ்லாமிய இலக்கியம்' எனும் கருப்பொருளில் உரை நிகழ்த்தினார். நேரத்தைக் கருத்திற் கொண்டு அங்கு சுருக்கமாக நிகழ்த்தப்பட்ட உரையின் முழு வடிவத்தை sheikhagar.org வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
இந்த மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்தி எனது உரையை அமைத்துக் கொள்ள விரும்புகிறேன். 'இலட்சிய வாழ்விற்கு இஸ்லாமிய இலக்கியம்' என்பது இம்மாநாட்டின் கருப்பொருளாகும். இக்கருப்பொருள் இரண்டு சொற்றொடர்களைக் கொண்டிருக்;கின்றது. ஒன்று இலட்சிய வாழ்வு, அடுத்தது இஸ்லாமிய இலக்கியம். முதலில் இலட்சிய வாழ்வு என்றால் என்ன என்பதை கலந்துரையாடுவது பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
No comments:
Post a Comment