Tuesday, June 28, 2011

ஹலால் ஹராம் பற்றிய

ஹலால் ஹராம் பற்றிய அல்குர்ஆனிலும் ஹதிஸ்களிலும் எவ்வளவு விலக்கி இருந்தும்; யூதர்கள் எமக்குல் ஹராத்தை புகுத்திவருகிறார்கள். இதை நாமும் அறியாமல் நாம் ஹராத்தை உண்னுவதுடன் எமது பாவனை பொருள்களாகவும் இன்று மாறிவாருகிறது. இதை நாம் விளங்கிகொள்வதற்காக வேண்டி அகில இலங்கை ஜமியதுல் உலமா இன்று பாடுபாட்டுவருகிறது. இதன் ஒரு கட்டமாக இலங்கை புராகவும் ஜமியதுல் உலமா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து நடத்திவருகின்றது. இதனை நாம் பாராமுகம் காட்டாமல் இன்நிகழ்ச்சிகளில்; பாங்குபற்றி ஹராம ஹலால் விளக்கத்தை பெருவதுடன். எம்மால் இயள்றளவு ஜமியதுல் உலமாவிற்கு உதவிகள் செய்வதுடன் ஹலால் ஹராம் பற்றிய விளக்கத்தையும் பெற்றுக்கொள்ளல் வேண்டும். இன்று ஜமியதுல் உலமாவினால் வழங்கப்படும் ஹலால் சான்றிதலை சில இடங்களில் போழியான சான்றிதல்களையும் வைத்துக்கொண்டிருப்பதும் தெரியவந்துள்ளது.    

Tuesday, June 21, 2011

இலட்சிய வாழ்விற்கு இஸ்லாமிய இலக்கியம்



உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு கடந்த மே மாதம் 20,21,22, ஆம் திகதிகளில் மலேசியாவில் நடைபெற்றது. அதில் விஷேட பேச்சாளராகக் கலந்து கொண்ட இஸ்லாமிய அறிஞர் அஷ்ஷெய்க் ஏ.ஸி. அகார் முஹம்மத் (நளீமி) அவர்கள் 'இலட்சிய வாழ்வுக்கு இஸ்லாமிய இலக்கியம்' எனும் கருப்பொருளில் உரை நிகழ்த்தினார். நேரத்தைக் கருத்திற் கொண்டு அங்கு சுருக்கமாக நிகழ்த்தப்பட்ட உரையின் முழு வடிவத்தை sheikhagar.org வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
இந்த மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்தி எனது உரையை அமைத்துக் கொள்ள விரும்புகிறேன். 'இலட்சிய வாழ்விற்கு இஸ்லாமிய இலக்கியம்' என்பது இம்மாநாட்டின் கருப்பொருளாகும். இக்கருப்பொருள் இரண்டு சொற்றொடர்களைக் கொண்டிருக்;கின்றது. ஒன்று இலட்சிய வாழ்வு, அடுத்தது இஸ்லாமிய இலக்கியம். முதலில் இலட்சிய வாழ்வு என்றால் என்ன என்பதை கலந்துரையாடுவது பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.