Tuesday, June 28, 2011

ஹலால் ஹராம் பற்றிய

ஹலால் ஹராம் பற்றிய அல்குர்ஆனிலும் ஹதிஸ்களிலும் எவ்வளவு விலக்கி இருந்தும்; யூதர்கள் எமக்குல் ஹராத்தை புகுத்திவருகிறார்கள். இதை நாமும் அறியாமல் நாம் ஹராத்தை உண்னுவதுடன் எமது பாவனை பொருள்களாகவும் இன்று மாறிவாருகிறது. இதை நாம் விளங்கிகொள்வதற்காக வேண்டி அகில இலங்கை ஜமியதுல் உலமா இன்று பாடுபாட்டுவருகிறது. இதன் ஒரு கட்டமாக இலங்கை புராகவும் ஜமியதுல் உலமா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து நடத்திவருகின்றது. இதனை நாம் பாராமுகம் காட்டாமல் இன்நிகழ்ச்சிகளில்; பாங்குபற்றி ஹராம ஹலால் விளக்கத்தை பெருவதுடன். எம்மால் இயள்றளவு ஜமியதுல் உலமாவிற்கு உதவிகள் செய்வதுடன் ஹலால் ஹராம் பற்றிய விளக்கத்தையும் பெற்றுக்கொள்ளல் வேண்டும். இன்று ஜமியதுல் உலமாவினால் வழங்கப்படும் ஹலால் சான்றிதலை சில இடங்களில் போழியான சான்றிதல்களையும் வைத்துக்கொண்டிருப்பதும் தெரியவந்துள்ளது.    

Tuesday, June 21, 2011

இலட்சிய வாழ்விற்கு இஸ்லாமிய இலக்கியம்



உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு கடந்த மே மாதம் 20,21,22, ஆம் திகதிகளில் மலேசியாவில் நடைபெற்றது. அதில் விஷேட பேச்சாளராகக் கலந்து கொண்ட இஸ்லாமிய அறிஞர் அஷ்ஷெய்க் ஏ.ஸி. அகார் முஹம்மத் (நளீமி) அவர்கள் 'இலட்சிய வாழ்வுக்கு இஸ்லாமிய இலக்கியம்' எனும் கருப்பொருளில் உரை நிகழ்த்தினார். நேரத்தைக் கருத்திற் கொண்டு அங்கு சுருக்கமாக நிகழ்த்தப்பட்ட உரையின் முழு வடிவத்தை sheikhagar.org வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
இந்த மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்தி எனது உரையை அமைத்துக் கொள்ள விரும்புகிறேன். 'இலட்சிய வாழ்விற்கு இஸ்லாமிய இலக்கியம்' என்பது இம்மாநாட்டின் கருப்பொருளாகும். இக்கருப்பொருள் இரண்டு சொற்றொடர்களைக் கொண்டிருக்;கின்றது. ஒன்று இலட்சிய வாழ்வு, அடுத்தது இஸ்லாமிய இலக்கியம். முதலில் இலட்சிய வாழ்வு என்றால் என்ன என்பதை கலந்துரையாடுவது பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

Saturday, May 14, 2011

AKURANA IJITHIMA


அக்குறணையில் இடம் பெற்ற இஜிதிமா 2011-04-24

Thursday, May 5, 2011

Dr. அப்துல்லாஹ் பெரியார் தாசன்

புதிதாக இஸ்லாத்தை ஏற்ற அப்துல்லாஹ் (பெரியார் தாசன்) 

தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவரும் பேராசிரியருமான முனைவர் பெரியார் தாசன் இஸ்லாத்தைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார். அவர் இனி தனது பெயர் அப்துல்லாஹ் என்று அறிவித்தார்.
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நீண்டக் காலம் தத்துவ இயல் பேராசிரியராக பணியாற்றி ஒய்வுப் பெற்றவர் பேராசிரியர் பெரியார் தாசன். திராவிடர் கழகத்தின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு நாத்திகராக வாழ்ந்த இவர் தனது இயற்பெயரான சேசாசலத்தை பெரியார்தாசன் என்று மாற்றிக் கொண்டார். சிறந்த மேடைப் பேச்சாளரான இவர் சிசுக் கொலைகள் குறித்த திரைப்படமான கருத்தம்மாவில் நடித்துள்ளார்.பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குக் கொண்டு மக்களின் அபிமானத்தைப் பெற்றவர்.
சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாதிற்கு சென்ற வாரம் வருகை தந்த பெரியார் தாசன் அங்கு வைத்து இஸ்லாத்தைத் தழுவினார்.
மார்ச் 12 அன்று ரியாதில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தான் இஸ்லாத்தைத் தழுவியதை அவர் பகிரங்கமாக அறிவித்தார். தான் பல மதங்களையும் ஆய்வு செய்ததாகவும் அம்மதங்களின் வேதங்கள் நேரடியாக இறைவனிடமிருந்து அருளப்படவில்லை என்றும் திருக்குர்ஆன் இறைவனிடமிருந்து அருளப்பட்ட வடிவில் இன்றும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். நான் ஊரறிந்த நாத்திகனாக இருந்தேன். பிறகு மத நம்பிக்கை தான் இவ்வுலக மற்றும் மறுவுலக வாழ்விற்கு உகந்தது என்று உணர்ந்தேன். இந்த தேடல் என்னை இஸ்லாத்திற்கு அழைத்து வந்தது என்றும் அவர் ரியாதில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.



Monday, May 2, 2011

BAYAN LIST


                                                     Assalamu alaikkum welcome to our site